Social Icons

Donnerstag, 1. Dezember 2016

நான் எழுதுவது கடிதம் அல்ல!கவிதை ஈழத் தென்றல்

உணர்ச்சிகளை மையாக்கி
உண்மையை பதிகின்றேன் கண்ணே,
இதை கடிதம் என்று கொள்ளாதே
இனியும் கண்களால் என்னைக் கொல்லாதே!

சொல்புத்தி சுயபுத்தி இரண்டும் இன்றி
சொர்க்கத்தில் இருக்கின்றேன் பெண்ணே,
எல்லாம் உன்னாலே இம்மாற்றம்
எதுவென்றே சொல்ல தெரியா தேக்கம்!

காலடிச் சத்தம் காதில் இனிக்கின்றதே
கல கல சிரிப்பும் கருத்தைக் கலைக்கின்றதே,
பருவத்தின் மாற்றம் எந்தன்
பாதையை கூட மாற்றுகின்றதே!

தூது சொல்ல தோழனும் இன்றி
தொலை பேசி தொல்லை இன்றி
நான் வரையும் வரிகள் இவைகள்
உனக்கென்றான என் உணரவுகள்!

கடிதம் என்று கொள்ளாதே
கடிந்து ஏதும் சொல்லாதே
உள்ளம் என்றே உணர்ந்திடு
உண்மை அன்பை மதித்திடு!
ஆக்கம்
ஈழத் தென்றல்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates